ஸ்டேலிங் விழுந்தது தற்செயலாகவே; லண்டனுக்கு அடித்த லக்
பிரித்தானியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கெ இடையே, நேற்றைய தினம் அரை இறுதிப் போட்டி இடம்பெற்றது.
ஆட்டத்தின் முடிவில் இரண்டு அணிகளுமே தலா ஒரு கோல் போட்ட நிலையில் சமமாக இருந்தார்கள். இந்த நிலையில், இறுதியாக மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில். ரஹீம் ஸ்டேலிங் என்ற நட்சத்திர ஆட்டக்காரரை, டென்மார்க் அணி உறுப்பினர் ஒருவர் தள்ளி விட்டதாக நினைத்து நடுவர் பெனால்டி ஒன்றை இறுதி நேரத்தில் கொடுத்ததால் பிரித்தானியா தலைவர், ஹரி கேன்ஸ் ஆபாரமாக ஒரு கோலை போட்டு, பிரித்தானியாவை வெற்றிபெறச் செய்தார்.
எனினும் இந்த பெனால்டி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல பிரித்தானியர்கள் கருதி உள்ளார்கள். டென்மார்க் அணியில் உள்ள பலர் ஏற்கனவே பிரித்தானிய வீரர்கள் மீது பல தடவை தாக்குதல் நடத்தியும் நடுவர் அதற்கு எதுவும் செய்யவில்லை.
ஆனால் இறுதியில் ஒன்றுமே நடக்காத இடத்தில் பெனால்டி ஒன்றை கொடுத்து விட்டார். இதனை அவர் முன்னரே செய்திருக்க வேண்டும் என பிரித்தானியர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் அரை இறுதியில் முன்னேறியுள்ள பிரித்தானியா, வரும் ஞாயிற்றுக் கிழமை இத்தாலியோடு மோத உள்ளது.
அதில் வென்றால், யூரோ2020க்கான கோப்பையை அது 25 வருடங்களின் பின்னர் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.