காணாமல் போன நாயின் அழுகுரல்; 5 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட ஆச்சர்யம்
அமெரிக்காவில் ஒரு நாய் இரு சுவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட நிலையில் ஐந்து தினங்களுக்கு பின் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ள சம்பவம் ஆச்சர்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ என்ற நகரத்தில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் எங்கோ ஓடிவிட்டது. இதனையடுத்து அதன் உரிமையாளர் பல இடங்களில் தேடி பார்த்தபோதும் அது கிடைக்கவில்லை.
இந்நிலையில் சுமார் ஐந்து நாட்கள் கழித்து வீட்டின் பக்கத்தில் நாய் அலறும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் எங்கு தேடியும், எந்த இடத்திலிருந்து நாயின் சத்தம் வருகிறது என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அது தொடர்பில் , அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டின் சுற்றுப்புறங்களில் தேடியுள்ளார்கள்.
அப்போது அருகில் இருக்கும் பக்கத்து வீட்டின் கான்கிரீட் சுவர்களுக்கு நடுவில் நாய் மாட்டிக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் அதன் பின்பு பெரிய சுத்தியலை வைத்து துளை போட்டு நாயை பத்திரமாக மீட்டுள்ளனர் தீயணைப்பு துறையினர்.