வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிக்க ஜப்பானின் பலே திட்டம் என்ன தெரியுமா?
தொழில்நுட்ப வளர்ச்சியின் உலகம் முன்னேறி கொண்டிருந்தாலும் இயற்கை சீற்றங்களுக்கு முன்னால் கைகட்டி நிற்க வேண்டிய நிலை தான்.
இயற்கையை அழித்துவிட்டு நகரத்தை உருவாக்கி, மீண்டும் இயற்கையை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், மழை, வெள்ளத்தால் உலகின் முன்னணி நகரங்கள் கூட திண்டாடி வருகின்றன.
இதற்கு தீர்வு தான் என்ன என ஒவ்வொரு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அதில் ஒன்று தான் ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை வாய்க்கால்கள்.
அதாவது, டோக்கியோவில் செயற்கையாக பூமிக்கடியில் 50 மீட்டர் ஆழத்தில் மழை நீர் செல்லும் மிகப்பெரும் சுரங்கத்தை (செயற்கை வாய்க்கால்) உருவாக்கியுள்ளனர்.
இதன் முடிவில், பூமிக்கடியில் மிகப்பெரும் நீர் சேமிப்பு தொட்டிகள் அமைந்துள்ளது, இது 6 கால்பந்து மைதானம் அளவு கொண்டது. சுரங்கத்தின் வழியாக வரும் மழை நீர், சேமிப்பு தொட்டியில் வந்து சேருகிறது.
பின்னர் இந்த சேமிப்பு தொட்டியில் இருக்கும் நீர், ராட்சத குழாய்கள் மூலம் பம்பிங் செய்யப்பட்டு அதன் அருகில் உள்ள எடவா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
சேமிப்பு தொட்டிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்கு 7 ஆயிரம் கன அடி நீரை ஆற்றில் வெளியேற்றுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் தற்போது மழை வெள்ள பாதிப்பில் இருந்து டோக்கியோ நகரம் முழுமையாக தன்னை காத்து கொள்கிறது. இதன் மூலம் மலை நீரும் சேமிக்கப்படுகிறது என்பது சந்தோஷமான தகவல்.