இரண்டாவது நாளாகவும் தொடரும் போர்; அச்சத்தின் பிடியில் உக்ரைன் மக்கள்!
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று மிலேச்சத்தனமான போர் தொடுத்ததுடன், ரஷ்யாவின் சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது.
உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும், ஒரே நாளில் உக்ரைன் நாட்டின் மீது திரும்பி என்ன நடக்குமோ என்ற பதற்றத்தின்ல் உள்ளநிலையில் உக்ரை மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 68 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது. எனினும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷிய தரப்பில் சேதமே இல்லையா என்ற கேள்விக்கு, ரஷியாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைப்பிடித்தும் இருக்கிறது.
அதேசமயம் முதல் நாள் சண்டையில் 137 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் விளோதிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2-வது நாளாக தொடர்ந்துவரும் நிலையில் , ரஷ்ய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகு போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரெயில்நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ரஷியாவுக்கு எதிராக தன்னந்தனியாக போராடி வருகிறோம் என உக்ரைன் அதிபர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
மேலும் கீவ் நகரில் உள்ள மக்களுக்கு 10,000 தானியங்க துப்பாக்கிகள் விநியோகித்துள்ளதாக உக்ரைன் அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.