திருமணம் முடிந்த கையோடு போராட்ட களத்திற்கு வந்த தம்பதி(Photos)
திருமணம் செய்து கொண்ட பின்னர் உடனடியாக கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட இளம் தம்பதியின் புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் இவர்கள் காலிமுகத் திடல் போராட்ட களத்திற்கு வந்துள்ளனர்.
திருமணம் முடிந்த கையோடு இவர்கள் போராட்ட களத்திற்கு வந்த இந்த இளம் தம்பதிக்கு நாடு பற்றிய உணர்வும் பலமும் எந்தளவுக்கு இருந்திருக்கும் என சமூக வலைத்தளங்களின் பின்னூட்டம் இட்டுள்ளவர்கள் கருத்து வெளியிட்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி மக்கள் தொடர்ந்தும் நான்காவது நாளாக காலிமுகத் திடல், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.