அப்படி ஒரு நாடே இருக்காது ; ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரான் என்ற நாடே இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டொனால்டு டிரம்ப், பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் டிரம்ப் பங்கேற்போது, டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் டிரம்பை கொலை செய்வதற்கு ஈரான் நாட்டில் சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளிவந்தது.
ஈரான் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் உத்தரவு
ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவராக இருந்தவர் காசிம் சுலைமானி. இவர், கடந்த 2020-ம் ஆண்டில் ஆளில்லா விமானம் கொண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோருக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. இதன் விளைவாக டிரம்புக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன.
இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப், ஈரான் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஈரான் தன்னைக் கொன்றால் அதை 'அழிக்க' வேண்டும் என்று ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக கூறினார். அதோடு ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது எனவும் டிரம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.