கனேடியர்களே உஷார்; இப்படியும் நடக்கின்றது
கனேடிய வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
றொரன்டோவில் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த போது, அவர்களது வீடு வேறு நபர்களினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த வீட்டு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
மோசடியான முறையில் வீட்டை பட்டியலிட்டு அதனை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இட்டோபிகொக் பகுதியில் இவ்வாறு வீடு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வீட்டின் உண்மையான உரிமையாளர்கள் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடு சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
உண்மையான வீட்டு உரிமையாளர்கள் போன்று போலி ஆவணங்களை தயாரித்து இந்த வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பவத்துடன் தொடர்படைய ஆண் மற்றும் பெண் ஆகியோரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே இவ்வாறு வீடு விற்பனை செய்யப்பட்டமை குறித்து பொலிஸார் பொதுமககளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.