இதற்காகதான் திருமணம் செய்துகொண்டேன்: ரஜினி பட நடிகை வெளியிட்ட சர்ச்சை தகவல்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படம் வெற்றி பெற்ற போதிலும் ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் பெரிய அளவிலான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்த ராதிகா ஆப்தே அவ்வபோது சில சர்ச்சைகளை ஏற்படுத்தும் தகவலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் வெளியிட்ட தகவல் ஒன்று பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அவர் அளித்த போட்டி ஒன்றில் எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. இருப்பினும் பிரித்தானியாவை சேர்ந்த இசை கலைஞர் ஒருவரை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் மிக எளிதாக விசா கிடைத்துவிடும் என்பதால், விசா வாங்குவதற்காகவே நான் திருமணம் செய்தேன் என அவர் தெரித்தார். ஒரு விசா பெறுவதற்காக திருமணம் செய்தேன் என நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எப்போது எல்லாம் என் கணவரை பார்க்க வேண்டிய நேரம் வருகிறதோ அப்போது மட்டும் அவரை நேரில் சென்று சந்தித்து வருவேன் என நடிகை ராதிகா ஆப்தே போட்டியில் கூறியுள்ளார்.
இதேவேளை இந்தியாவில் திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகின்ற போது நடிகை ராதிகா ஆப்தே இவ்வாறு கூறி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.