இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா (Maria Ressa), ரஷிய பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோ (Dmitry Muratov)வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமையில் இருந்து இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதுடன் , இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மரியா ரெஸ்ஸா (அமெரிக்க பத்திரிகையாளர்), டிமிட்ரி முராடோவ் (ரஷிய பத்திரிகையாளர்) ஆகியோருக்கே இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.