ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் வரலாம்; உக்ரைன் விடுத்த அறிவிப்பு
உக்ரைனில் போர் பதற்றத்தினால் ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பிராந்திய பாதுகாப்பு படைகளில் சேரலாம் என உக்ரைன் பாதுகாப்பு மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ரஷிய படைகளில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன.
இந்த நிலையில் பாதுகாப்பு படைகளில் சேர்வதற்கு அந்நாட்டு மக்களுக்கு உக்ரைனின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பிராந்திய பாதுகாப்பு படைகளில் சேரலாம் என அவர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான போரை துவக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.