இத்தாலியில் மூன்று நாட்கள் முடக்கநிலை அமுல்
இத்தாலியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க, மூன்று நாட்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பிராந்தியங்களும் இப்போது சிவப்பு மண்டலத்திற்குள் நுழைகின்றன. இதன்பொருள் அங்கு மிக உயர்ந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாடு மூன்றாவது அலையை எதிர்த்துப் போராடுகையில், ஒரு நாளைக்கு சுமார் 20,000 புதிய தொற்றுகள் உள்ளன. அத்தியாவசியமற்ற இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.
எனினும் மக்கள் தங்கள் வீடுகளில் ஈஸ்டர் உணவை மற்ற இருவருடன் சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள். அத்துடன் தேவாலயங்கள் திறந்திருக்கும் என்றும், எனினும் வழிபாட்டாளர்கள் தங்கள் சொந்த பிராந்தியங்களுக்குள் சேவைகளில் கலந்து கொள்ளுமாறும் கூறப்படுகிறார்கள்.
மேலும் இரண்டாவது ஆண்டாக, போப் பிரான்சிஸ் தனது ஈஸ்டர் செய்தியை வெற்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் வழங்குவார் எனவும் கூறப்படுகின்றது.