ஒட்டாவாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்; 3 பேர் பலி
ஒட்டாவாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த நபர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒட்டாவாவின் அனோக்கா வீதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருடன் மோதிக் கொண்டதில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒட்டாவா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த மரணங்களுடன் பொலிஸாருக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.