3 வருடமாக 6 வயது சிறுமியை சித்தரவதை செய்து கொன்ற கொடூரன்!
3 வருடமாக 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி, அவரை கொலை செய்ததாகக் கூறப்படும் இளைஞரை இந்திய கேரளா மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் ஆறு வயது சிறுமி கழுத்து இறுக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் முக்கியத் திருப்பமாக, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது. கேரளாவை அதிர வைத்துள்ள இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரிடம் பொலிஸார் நேரடி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் திகதி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான பெற்றோரின் 6 வயது சிறுமி வீட்டில் வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிறு இறுக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. குழந்தை விளையாடும்போது கழுத்து இறுக்கி இறந்ததாக கூறப்பட்டது. 3 வருடமாக பாலியல் துஷ்பிரயோகம்: நட்புடன் பழகி குழந்தையை கொன்ற வாலிபர் குழந்தையின் பிரேத பரிசோதனை முடிந்து சுரக்குளம் கிராமத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது. கிராம மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த அர்ஜூனன் ( வயது 22 ) என்ற இளைஞர் தேம்பி தேம்பி அழுதார். அவர் சிறுமியை தான் மிகவும் நேசித்ததாக கூடி இருந்தவர்களிடம் கூறினார். இவர் சிபிஐ (எம்) இன் இளைஞர் பிரிவில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், இடுக்கி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தெரியவந்தது. மேலும் சிறுமி 3 வயதில் இருந்து இதே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்த பொலிஸார் அந்த குடும்பத்துடன் பழகி வந்த அர்ஜூனனிடம் விசாரணை நடத்தினர். ஆனால் ஆர்ஜூனன் 2 நாட்களாக சிறுமியை பார்க்கவில்லை என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணையில் அக்கம்பக்கத்தவர்கள் சிறுமியை அர்ஜூனனுடன் பார்த்ததாக கூறியுள்ளனர்.
பொலிஸார் அர்ஜூனனை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சிறுமிக்கு சொக்லெட் கொடுத்து அடிக்கடி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை அர்ஜூனன் ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த அன்றும், சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியபோது இறந்துவிட்டதால், வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிற்றில் கட்டி தொங்க விட்டுள்ளார். இந்த கொடூரத்தை அரங்கேற்றிய பிறகு சிறுமியின் இறுதிச்சடங்கிலும் பங்கேற்று சாதாரணமாக பழகியுள்ளார்.
அர்ஜூனனின் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடங்களுக்கு அழைத்துச்சென்று அவரது வாக்குமூலத்தை பொலிஸார் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிற்கும் 2017 ஆம் ஆண்டில் சென்னையில் ஏழு வயது சிறுமி ஹாசினி – பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்ட வழக்குக்கும் அதிக ஒற்றுமைகள் உள்ளன.
சென்னை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், 23 வயதான தஸ்வந்த், பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர். அர்ஜுனைப் போலவே தஸ்வந்த், ஹாசினியை அணுகி, அவளை கவர்ந்து, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி, கழுத்தை நெரித்து, கொலை செய்துள்ளார்.
ஹாசினியை காணவில்லை என அவர்களது பெற்றோருடன் சேர்ந்தே தஸ்வந்தும் தேடிவந்தார். இதுபோலவே அர்ஜூனனும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.