மரபணு சோதனை மூலம் தனக்கு 50 சகோதரர்கள்! அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து பெண்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டிக் டாக் பிரபலமான பெண் ஒருவர் வீட்டிலே செய்து கொண்ட டி.என்.ஏ சோதனை மூலம் தனக்கு 50 சகோதர சகோதரிகள் இருப்பதை கண்டறிந்துள்ளார்.
2018ம் ஆண்டு அந்த இளம்பெண், தனது பூர்வீகம் குறித்து தெரிந்து கொள்வதற்காக டி.என்.ஏ எனப்படும் மரபணு சோதனையை மேற்கொண்டிருக்கிறார்.
பரிசோதனையில் முடிவில் அவர் எதிர்பார்த்தது போலவே தான் ஒரு இத்தாலி பெண் இல்லை என்பதையும் தான் ஒரு மரபணு கொடையாளர் மூலம் பிறந்த குழந்தை என அந்த டிக் டாக் பிரபலத்துக்கு தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து அந்த சோதனை முடிவு கிடைத்த பின்னர் சிறிது நாட்களில் இந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்ட ஒரு பெண்மணி உங்களது விவரங்களை கூற முடியுமா ஏனென்றால் என்னுடைய மகளுக்குள், உங்களுக்கு ஒரே டி.என்.ஏ தான் இருக்கிறது என சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து அந்த பெண்மணி கூறியவாறு அவருடைய மகளும், தானும் ஒரே விந்தணு கொடையாளர் மூலம் பிறந்த சகோதரிகளாக இருக்கக் கூடும் என யூகித்தார்.
இது தவிர அந்த டிக் டாக் பிரபலத்தின் தாய் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தவர் என்பதால் அவரது சகோதரிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
அதன்பின்னார் தனக்கு, வேறு யாரேனும் மரபணு ரீதியில் சகோதர்கள் இருக்கிறார்களா என தெரிந்துகொள்வதற்காக தனது பேஸ்புக் குரூப் ஒன்றை தொடங்கி தனது சகோதரிகளுக்கு லிங்கை அனுப்பி வைத்திருக்கிறார். இதன் மூலம் தனக்கு 50 சகோதர சகோதரிகள் இருப்பதை அறிந்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இதுகுறித்து அந்த பெண்மணி கூறுவதாவது, ரபணு ரீதியிலான தன்னுடைய சகோதர, சகோதரிகளுடன் உறவை பகிர்ந்து கொள்ள பயமாக இருப்பதாகவும், ஒரு வேளை எதிர்காலத்தில் என்னுடைய சகோதரருடனே டேட்டிங் செய்துவிடுவேனோ என்ற அச்சமும் இருந்து வருவதாக கூறியிருக்கிறார்.
இச்சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.