தென் ஆப்பிரிக்காவில் டன் கணக்கில் திருடுபோகும் பச்சை தங்கம்!
தென்னாப்பிரிக்காவின் வடக்குப்பகுதியில் பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் அவோகடோ பழங்கள், ஒரு நாள் இரவில் டன் கணக்கில் திருடப்படுவதால் விவசாயிகள் ஆயுதம் ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு கோரி உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த அவோகடோ பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அவோகடோ தோட்டங்களில் இரவோடு இரவாக டன் கணக்கில் பழங்கள் திருடப்படுவதாக விவசாயிகள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனால் தங்களுக்கு லட்சக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், அவோகடோ பழங்களுக்கு ஆயுதங்களுடன் பொலிஸாரை பாதுகாப்பு அளிக்குமாரு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.