இன்று முதல் மேல் மாகாண பாடசாலைகள் திறப்பு
மேல் மாகாணத்திலுள்ள தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் கடந்த 25ம் திகதியுடன் நிறைவு பெற்றிருந்தன. இந்நிலையில் , இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
இதற்கு அமையவே, மேல் மாகாணத்தின் தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.