ரொறன்ரோ விமான நிலையம் முன்னெடுத்த அதிரடி முடிவு!
தடுப்பூசி போட்டுக் கொண்டதன் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணிகளை வெவ்வேறாக அனுமதிக்க எடுத்த முடிவை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையம் கைவிட்டுள்ளது.
முழுமையான தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களை தனியாகவும், முழுமையான தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதவர்களை தனியாகவும் உள்ளீர்க்க ரொறன்ரோ விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.
எனினும் இந்த முடிவு கைவிடப்பட்டுள்ளதாக விமான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறைந்தளவு செயல்திறனையே கொண்டிருப்பதாகவும் , இதனால், அந்த திட்டம் கடந்த 26ஆம் திகதியுடன் கைவிடப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.