காலை உணவுக்கு பின் சுருண்டு விழுந்து இறந்த சிறுமி: சிக்கிய ரொறன்ரோ நபர்
காலை உணவுக்கு பின்னர் சுருண்டு விழுந்து சிறுமி இறந்த விவகாரத்தில் கைதான நபர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் வசிக்கும் Francis Ngugi என்பவர் மீதே கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. Bernice Nantanda Wamala என்ற சிறுமி தமது தோழியின் குடியிருப்பில் இருந்து சாப்பிட்ட காலை உணவில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜூன் மாத துவக்கத்தில் தமது பணியிடத்தில் இருந்து எடுத்து வந்த ரசாயனப் பொருளை சிறுவர்களுக்கான உணவில் கலந்து வைத்துள்ளார் Ngugi.
இதில் சிறுமி Bernice Nantanda Wamala பரிதாபமாக இறந்த நிலையில், அவருடன் உணவருந்திய தோழி, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, நீண்ட நாள் தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டுள்ளார்.
கொல்லப்பட்ட சிறுமிக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள Ngugi, ஆனால் விஷம் கலந்ததன் காரணத்தை வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது.
Ngugi மீண்டும் ஜூலை 31ம் திகதி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார் என தெரிய வந்துள்ளது.