கனடாவில் சாரதியை மிரட்டி Lamborghini கார் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட கும்பல்
ரொறன்ரோ இளைஞரை மிரட்டி கும்பல் ஒன்று 300,000 டொலர் மதிப்பிலான Lamborghini கார் மற்றும் அதன் உள்ளே இருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரொறன்ரோவில் யோங் மற்றும் புளூர் தெரு அருகாமையில் வியாழக்கிழமை இரவு குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உடன் பணியாற்றும் ஒருவரை அவரது குடியிருப்பு அருகே விட்டுவிட சென்றுள்ளார் 27 வயதான Peng Bao.
அந்த நேரத்தில், திடீரென்று இவரை அணுகிய நபர், கத்தியை காட்டி மிரட்டி இவரை காரில் இருந்து வெளியேற்றியுள்ளார். பின்னர் இன ரீதியாக திட்டிவிட்டு இவரை தரையில் தள்ளி கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனிடையே, காரின் சாவியை பிடுங்கிய அந்த கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் காருடன் மாயமானதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, இவருடன் பணியாற்றும் அந்த நபர் அருகாமையில் உள்ள குடியிருப்புக்கு தப்பிச் சென்றி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வெளிளிக்கிழமை உறுதி செய்த ரொறன்ரோ பொலிசார், விசாரணை முன்னெடுத்து வருவதாகவும், குற்றவாளிகளின் அங்க அடையாளங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கார் கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு தமக்கு உதவியதாக Peng Bao தெரிவித்துள்ளார். திருடு போன அந்த கார் தமக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் தமது பெற்றோர் பரிசாக அளித்தது எனவும், சம்பவத்தின் போது அந்த காருக்குள் 80,000 மதிப்பிலான பொருட்களும் இருந்தது என Peng Bao பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது காப்பீட்டு நிறுவனத்திடம் தொடர்பு கொண்டுள்ளதாகவும், தமக்கு ஏற்பட்ட இழப்பை அவர்கள் ஈடு செய்வார்கள் என நம்புவதாக Peng Bao குறிப்பிட்டுள்ளார்.
11 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் குடியேறியதாக கூறும் Peng Bao, தற்போது ஒரு நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளதாகவும், இப்படியான ஒரு சூழல் தமக்கு ஏற்படும் என்று தாம் கருதவில்லை எனவும் Peng Bao தெரிவித்துள்ளார்.