ரொறன்ரோவில் 5 நாட்களில் 13 மர்ம மரணம்: எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை
ரொறன்ரோவில் 5 நாட்களுக்குள் அதிக போதைமருந்து பயன்பாட்டால் 13 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2ம் திகதி முதல் ம் திகதி வரையான காலகட்டத்திலேயே, இந்த 13 இறப்புகளும் நேர்ந்துள்ளது. மேலும், அதிகபட்சமாக மே 6ம் திகதி மட்டும் ஒரே நாளில் 5 பேர் அதிக போதைமருந்து பயன்பாட்டால் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஒரே வாரத்தில் 13 உயிர்கள் பறிபோயுள்ளது, கட்டுப்பாடற்ற போதைமருந்து விநியோகத்தின் கணிக்க முடியாத தன்மையை எடுத்துக்காட்டுகிறது என ரொறன்ரோ பொது சுகாதாரத்துறை விமர்சித்துள்ளது.
மட்டுமின்றி போதைமருந்து பயன்பாட்டாளர்கள், வீரியம் மிகுந்த மருந்துகளை சமீபத்தில் அதிகம் நாடுவதாகவும், இதனாலையே, இறப்பு எண்ணிக்கையும் அதிகமாவதாக தெரிய வந்துள்ளது.
போதைமருந்துகளை தனியாக பயன்படுத்த வேண்டாம் எனவும், போதிய திட்டமிடலுடனும் பாதுகாப்புடனும் பயன்படுத்த வேண்டும் எனவும் ரொறன்ரோ பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.