ரொறன்ரோவில் கத்தி குத்து தாக்குதலில் நபர் ஒருவர் பலி!
ரொறன்ரோ கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவின் அலன் கார்டன் பூங்கா பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரொறன்ரோவின் ஜார்விஸ் மற்றும் கார்ல்டன் பகுதி வீதிகளுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது 40 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டரார்.
கடுமையான கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் 20 வயது மதிக்கத் தக்க கறுப்பின இளைஞர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளார்.
ஐந்து அடி எட்டு அங்குலம் உயரமுடைய குறித்த நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.