வாகனம் மோதி கொல்லப்பட்ட அதிகாரி: ரொறன்ரோ பொலிசார் இறுதி அஞ்சலி
பணியின் போது வாகனம் மோதி கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு, சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு பணியின் போது Jeffrey Northrup என்ற பொலிஸ் அதிகாரி இளைஞர் ஒருவரால் வாகனத்தால் மோதி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இவருடன் பணியில் இருந்த இன்னொரு அதிகாரி லேசான காயங்களுடன் தப்பினார். சம்பவத்தின் போது இரு அதிகாரிகளும் பொலிஸ் உடையில் இல்லை எனவும், ஆனால் பொலிசாருக்கான அடையாளத்துடன் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் 31 வயதான Umar Zameer என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த 31 ஆண்டுகளாக ரொறன்ரோ காவல்துறையில் Jeffrey Northrup பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் தான் 52வது பிரிவில் இணைந்து பணியாற்ற துவங்கியிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நண்பகல் Jeffrey Northrup உடல் உரிய பொலிஸ் மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.