புகைப்படம் வெளியிட்டு அடையாளம் காணக் கோரிய ரொறன்ரோ பொலிஸ்
பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை அடையாளம் காண ரொறன்ரோ பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஜூலை 4ம் திகதி வழக்கிற்கு தொடர்புடைய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு ஷெப்பர்ட் அவென்யூ பகுதியின் வடக்கே Rouge ஆற்றின் சுற்றுவட்டாரத்தில் சம்பவத்தின் போது குறித்த பெண் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அறிமுகமில்லாத நபர் அவரை அணுகியதுடன், வலுக்கட்டாயமாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தேடப்படும் நபருக்கு 40 வயதிருக்கலாம் எனவும், சுமார் ஆறடி உயரம் கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் உருவாக்கியுள்ள புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.