பிரேசிலில் சுற்றுலா சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
பிரேசில் சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சமபவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,
பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு பெண்கள், சிறுவர்கள் உள்பட 54 பயணிகளுடன் சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் அங்கு பரானா என்ற நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடிய நிலையில் சாரதி பஸ்சை நிறுத்த முயற்சித்த போதும் பஸ் சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஒரு பெண் அவரது 3 வயது குழந்தை உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 22 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.