8 நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தடை
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டப்படுத்தும் வகையில் நாளை மறுதினம் (30) புதன்கிழமை நள்ளிரவு முதல் 8 நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய அங்கொலா, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சுவிட்சர்லாந்து, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 14 நாட்களினுள் குறித்த நாடுகளுக்குச் சென்ற பயணிகளுக்கும், அந்த நாடுகளின் வழியாக வரும் புலம்பெயர்ந்த பயணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவை அதிகாரசபை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.