கனேடிய பாடசாலை சீருடைகளில் இப்படியொரு ஆபத்தா? எச்சரிக்கை
கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வட அமெரிக்க பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் பயன்படுத்தும் சீருடைகளில் நச்சு ரசாயன பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது ஆடைகளில் கறை படிவதனை தடுக்க பயன்படும் பதார்த்தத்தின் மூலம் உருவாக்கப்படும் சீருடைகளில் இவ்வாறு நச்சுப் பொருளை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் பயன்படுத்தும் சீருடைகள் ஆபத்தற்றவை ஆக இருக்க வேண்டும் என எனவும் இதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் டொரன்டோ சுற்றாடல் விஞ்ஞான பேராசிரியர் மரியம் டைமண்ட் தெரிவித்துள்ளார்.
polyfluoroalkyl substances (PFAS) என்னும் பொருள் பாடசாலை சீருடைகளில் காணப்படுவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குளிர்காலத்தில் அணியும் ஆடைகள், தலை கவசங்கள் போன்ற பல ஆடைகளில் இந்த வகை நச்சு ரசாயனம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வகை ரசாயனங்கள் அழிவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் எனவும் இந்த ரசாயனம் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்தும் எனவும் இவற்றை உட்கொண்டால் அல்லது மனித உடலுக்குள் சென்றால் அது நச்சுத்தன்மை வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிலவகை ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, ஆஸ்துமா, தைய்ரோயிட் போன்ற ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தண்ணீர் உட்புகாத, கறை படியாத என விளம்பரப்படுத்தப்படும் சீருடை வகைகளில் இவ்வாறான ஆபத்து காணப்படுவதாகவும் இந்த வகை ஆடைகளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் பேராசிரியர் டைமண்ட்(Miriam Diamond) பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனேடிய பாடசாலை சபைகள் இவ்வாறான சீருடைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.