கிரீஸ் நாட்டில் சிக்கிய ஆட்கடத்தல்காரர்கள்
வெளிநாட்டினரை கடத்தி வந்த ஆட்கடத்தல்காரர்களை கிரீஸின் Rodopi, Evros பகுதியில் அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
Rodopi பகுதியில் சாலை விதிகளைப் பின்பற்றாமல் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை பரிசோதித்ததில் அவ்வாகனத்தில் வந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர்கள் எவ்வித பயண ஆவணங்களுமின்றி பயணித்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து வெளிநாட்டைச் சேர்ந்த அவ்வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, அவர் மீது ஆட்கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும் Evros பகுதியில் நடந்த மற்றொரு கைதில், படகு வழியாக வந்த 3 வெளிநாட்டினர்களும் அவர்களை அழைத்து வந்த வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.