பிரான்ஸில் நடந்த கொடூர சம்பவம்: அகதிகள் 3 பேருக்கு நேர்ந்த சோகம்!
பிரான்ஸில் தண்டாவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரயில் ஏறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான பியாரிட்ஸில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது,
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள் பியாரிட்ஸ் நகரிலிருந்து தான் பிரான்ஸின் மற்ற இடங்களுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (11) இரவு பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர் அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 6 மணிக்கு இந்த தண்டவாளத்தில் ரயில் வந்த போது தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகளை ரயில் சாரதி கவனிக்காததால் அவர்கள் மீது ரயில் ஏறியதுள்ளது.
இச்சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு அகதிக்கு கால் உடைந்தது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.