கொரோனா பரவல் குறைந்த நாடுகளுடன் பயண ஏற்பாடுகள்; ஆஸ்திரேலியா திட்டம்
நியூசிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற விமானப்பயணம் எதிர்வரும் 19ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், கொரோனா பரவல் குறைவாக உள்ள ஏனைய சில நாடுகளுடன் பயண ஏற்பாட்டினை மேற்கொள்ள திட்டமிடப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக சிங்கப்பூர், ஜப்பான், வியட்நாம் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயண ஏற்பாட்டினை மேற்கொள்வதற்கு ஆலோசிக்கப்பட்டுவருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
எனினும் இதுகுறித்த இறுதி முடிவு எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை எனவும் எந்த நாட்டுடனும் பயண ஏற்பாடுகளை உறுதிசெய்வதற்கான சூழல் தற்போது இல்லை எனவும் பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்தியா- ஆஸ்திரேலியா இடையில் இவ்வாறான பயண ஏற்பாடு சாத்தியப்படுமா என கல்வி அமைச்சர் Alan Tudge-இடம் கேட்டபோது அதற்கான சாத்தியம் தற்போதைக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்று அங்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் இந்தியாவுடனான பயண ஏற்பாடு தொடர்பில் தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கமுடியாது என அமைச்சர் Alan Tudge கூறினார்.