லொறியில் டயர் மாற்றிக் கொண்டிருந்த நபர்... கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சம்பவம்
லொறியில் டயர் மாற்றிக்கொண்டிருந்த நபர் மீது கண்ணிமைக்கும் நொடியில், அந்த லொறி சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோவின் Caledon பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் சனிக்கிழமை மாலை நேரம் நடந்துள்ளது. 32 வயதான அந்த நபர் தமது லொறியில் டயர் ஒன்றை மாற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது திடீரென்று அந்த லொறியானது அவர் மீது அப்படியே சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பீல் அவசர உதவிக்குழுவினர், சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு லொறியை அப்புறப்படுத்த, அந்த 32 வயது நபர் உடல் நசுங்கி மரணமடைந்துள்ளதை கண்டறிந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஒன்ராறியோ மாகாண காவல்துறை மற்றும் தொழிலாளர் அமைச்சகம் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.