ஏழாவது நாளாக தொடரும் லொறி வேலை நிறுத்தம்: சிக்கலை எதிர்கொள்ளும் பொருளாதாரம்
தென் கொரியாவில் ஊதிய உயர்வு கேட்டு லொறி சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது புதிய ஜனதிபதிக்கு அழுத்தத்தை அளித்துள்ளது.
ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதார நாடான தென் கொரியா, இதனால் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. தொழிற்சங்கங்களை சேர்ந்த சாரதிகள் ஊதிய உயர்வு கேட்டு கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், இரும்பு தொழிற்சாலையான POSCO, சேமித்து வைக்க இடம் இல்லாததால் சில ஆலைகளை திங்கள்கிழமை முதல் நிறுத்த திட்டமிட்டுள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் சில ஆலைகளில் உற்பத்தியை குறைத்துள்ளது.
தற்போதைய இந்த வேலை நிறுத்த விவகாரம், பொறுப்பேற்று 5 வாரங்களேயான ஜனாதிபதிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டங்களில் ஈடுபட்ட பல டசின் சாரதிகள் கைதாகியுள்ளனர். மேலும், அரசாங்கத்துடன் தொழிற்சங்கங்கள் நான்கு முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் உரிய முடிவு எட்டவில்லை என்றே தெரிய வந்துள்ளது.