இந்தியாவுடன் நாம் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம். ; அமெரிக்காவிலிருந்து வெளியான தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அரசு, நட்பு நாடுகளை அந்நியப்படுத்துவதாகவும் `இந்தியாவுடன் நாம் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம் எனஅந்நாட்டு முன்னாள் கருவூலச் செயலர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் ஒரு பள்ளியில் அந்நாட்டு முன்னாள் கருவூலச் செயலர் ஜினா ரைமோண்டோ பேசுகையில்,

ட்ரம்ப் நிர்வாகம்
``இந்தியாவுடன் நாம் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம். ட்ரம்ப் நிர்வாகம், நமது அனைத்து நட்பு நாடுகளையும் கோபப்படுத்தியுள்ளது. அமெரிக்காதான் முதலில் என்பது ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா தனியாக இருப்பது ஒரு பேரழிவைத் தரும் கொள்கையாகும்.
ஐரோப்பா அல்லது தென்கிழக்கு ஆசியாவின் (ஜப்பான்) பெரும்பகுதியுடன் வலுவான உறவுகள் இல்லாத அமெரிக்கா, ஒரு வலுவற்ற அமெரிக்காவாகத்தான் இருக்கும். ஐரோப்பாவுடன் நாம் மிகவும் வலுவான வணிக உறவுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தியாவுடனான உறவில் நாம் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம். எல்லாவற்றையும் அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை’’ என்று தெரிவித்தார்.