பாப்பரசரின் இறுதி நிகழ்வில் சந்தித்துப் பேசிய ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி
போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்ற செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசினார்.
வெள்ளைமாளிகை ஓவல் அலுவலத்தில் நடைபெற்ற கடும் சாரசாரமான வாக்குவாதத்தின் பின்னர் நடைபெற்ற முதல் இச்சந்திப்பு இதுவாகும்.
அமெரிக்க ஜனாதிபதி உக்ரைன் தலைவரை ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய அழுத்தம் கொடுத்ததால் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இறுதிச் சடங்கிற்குப் பிறகு இருவரும் மேலும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பசிலிக்காவின் ஒரு மூலையில், இருவரும் நேருக்கு நேர் அமர்ந்து பேச்சு நடத்திய புகைப்படம் வெளியாகியது. ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபடும் புகைப்படங்களை உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டது.
ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபடும் புகைப்படங்களை உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டது. மற்றொரு புகைப்படம், பசிலிக்காவின் உள்ளே பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் தோளில் கை வைத்த இம்மானுவேல் மக்ரோன் ஆகியோருடன் இரு தலைவர்களும் ஒன்றாகக் கூடி நிற்பதைக் காட்டியது.