எயார் இந்தியா விமான விபத்து குறித்து ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
எயார் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டாா்.
அமெரிக்காவில் செய்தியாளா் சந்திப்பில் அஹமதாபாத் விமான விபத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘இந்த விமான விபத்து மிகவும் கொடூரமானது.
அமெரிக்காவின் உதவி எதாவது தேவையெனில், அதைச் செய்ய நாங்கள் தயாராக இருப்பதாக இந்தியாவிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். விபத்தில் பெரும்பாலானோா் இறந்துவிட்டதாகத் தெரிகிறது.
ஒருவா் மட்டுமே உயிா் பிழைத்திருக்கிறாா். விபத்துக்கு முன்பு விமானம் நன்றாக பறந்து கொண்டிருக்கிறது திடீா் என்ஜின் செயலிழப்பு போல் தோன்றுகிறது. இது விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும்’ என்றாா்.