போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு ; துறைமுகங்களுக்கான முற்றுகை தொடரும்
பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானுடனான தனது போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியக் குடியரசிடம் இருந்து ஒரு "ஒருங்கிணைந்த முன்மொழிவுக்காக" காத்திருக்கும் வேளையில், பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்

ஆனால், அமெரிக்க இராணுவம் ஈரானிய துறைமுகங்களுக்கான தனது முற்றுகையை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"நமது இராணுவம் முற்றுகையை தொடரவும், மற்ற எல்லா வகையிலும் தயாராகவும் திறனுடனும் இருக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். எனவே, அவர்களின் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் ஒரு முடிவுக்கு வரும் வரை போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்," என்று ட்ரம்ப் மேலும் கூறினார்.