இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க இலங்கை மக்களிடம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தற்போது துருக்கியில் உள்ள இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அல்லது தூதரகத்திற்கு தெரியப்படுத்துமாறு துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அண்டிய பகுதியில் இருந்த 15 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,துருக்கியில் உள்ள தமது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறியவும், அவர்கள் தொடர்பான தகவல்களை அறிய விசேட இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி தகவல் பெற வேண்டியவர்கள் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்டுள்ள 009 03 124 271 032, 009 05 344 569 498 ஆகிய இரண்டு அவசர எண்கள் ஊடாக தொடர்புகொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.