இலங்கை வந்தார் துருக்கியின் வெளியுறவு அமைச்சர்!
துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் 'Mevlut Cavusoglu' ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.அவருடன் சேர்ந்து 13 பேர் கொண்ட குழுவும் நாட்டை வந்தடைந்துள்ளது.
இன்று காலை 6.00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு துருக்கியில் இருந்து விசேட விமானம் மூலம் வருகை தந்துள்ளனர்.
இன்னிலையில் விமான நிலையத்தை வந்தடைந்த தூதுக்குழுவினரை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான துருக்கிய தூதுவர் வரவேற்றனர்.
இதனைதொடர்ந்து துருக்கி வெளியுறவு அமைச்சரின் விஜயத்துக்கான நோக்கம் நிறைவடைந்ததும், தூதுக்குழுவினர் அனைவரும் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர்.