இலங்கை குறித்து பிரஜைகளை எச்சரித்த முக்கிய இரு நாடுகள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள கலவர நிலமையை அடுத்து இலங்கைக்கான பயணத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அவுஸ்திரேலியா வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், அடுத்த மாதம் இலங்கையில் இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இலங்கையில் நிலவும் அரசியல் பதற்றம் குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நியூசிலாந்தும் தமது நாட்டு பயணிகளுக்கு இலங்கை குறித்த பயண ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.