பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கியர்கள்
பாகிஸ்தானின் பதற்றமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இருவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெஷாவர் நகரின் சர்பந்த் பகுதியில் உள்ள பட்டா டோல் பஜாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர்கள் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களான சல்ஜீத் சிங், 42 மற்றும் ரஞ்சித் சிங், 38 என அடையாளம் காணப்பட்டனர். கொலை நடந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
பெஷாவரில் 15000 சீக்கியர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சுயதொழில் செய்பவர்கள். சிலருக்கு மருந்தகங்கள் உள்ளன.
இந்த தாக்குதலுக்கு கைபர் பக்துன்க்வா முதல்வர் மஹ்மூத் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டார்.