துப்பாக்கிச்சூட்டில் இரு பொலிஸார் கொலை
ஆஸ்திரேலியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொலிஸார் 2 பேர் கொல்லப்பட்டனர்.
மெல்போர்ன் அருகில் உள்ள விக்டோரியா பகுதியில் போரேபுன்கா என்ற நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஒன்றை வழங்க பொலிஸார் சென்றுள்ளனர்.
பொது வெளியில் நடமாட வேண்டாம்
அப்போது எங்கிருந்தோ மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
துப்பாக்கியால் சுட்ட நபர் எங்கிருந்து சுட்டுள்ளார் என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணியில் பொலிஸார் குழுக்களாக இறங்கி இருக்கின்றனர்.
துப்பாக்கியுடன் மர்ம நபர் காணப்படுவதால் பொது மக்கள் யாரும் வீடுகளை விட்டு பொது வெளியில் நடமாட வேண்டாம் என்று பொலிஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.