சீன இராணுவதளபதியை இரகசியமாக சந்தித்த அமெரிக்க இராணுவ தளபதி ; அமெரிக்க அரசியலில் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி வகித்த காலத்தில் அவர் சீனாவிற்கு எதிராக போர் தொடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக அமெரிக்க இராணுவ தளபதி சீன இராணுவதளபதியை இரகசியமாக தொடர்புகொண்டார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளமை அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி அமெரிக்க இராணுவதளபதி மார்க் மில்லேய் சீனா இராணுவதளபதியை இரகசியமாக தொடர்புகொண்டார் என புதிதாக வெளியான நூலொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோசிங்டன் போஸ்டின் புலனாய்வு செய்தியாளர்கள் வெளியிட்டுள்ள நூலில் மார்க் வில்லே சீன ஜெனரல் லீ சூச்செங்கினை கடந்த ஜனவரியில் தொடர்புகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்க மறுத்த பின்னரே அமெரிக்க இராணுவதளபதி சீன இராணுவ தளபதியை தொடர்புகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரில் என்ற அந்த நூலில் ஜனவரி 6 ம் திகதி இடம்பெற்ற கலவரங்களின் பின்னர் டிரம்ப் தேர்தலின் பின்னர் மோசமான மனோநிலை பாதிப்பிற்கு உட்பட்டுள்ளார் என இராணுவதளபதி கருதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு டிரம்ப் முரட்டுத்தனமாக செயற்படுவார் என அவர் அஞ்சினார் எனவும் பெரிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம் ஸ்திரமாக உள்ளது என சீன தளபதிக்கு தெரிவித்த அமெரிக்க இராணுவதளபதி அமெரிக்கா தாக்காது அவ்வாறு தாக்கும் திட்டமிருந்தால் சீனாவிற்கு முதலில் எச்சரிப்போம் எனவும் குறிப்பிட்டதாகவும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அணுவாயுத தாக்குதலிற்கு உத்தரவிட்டால் தனக்கு தெரிவித்து அனுமதி பெற்ற பின்னரே அதனை நிறைவேற்றவேண்டும் என இராணுவதளபதி தனது அதிகாரிகளிற்கு தெரிவித்திருந்தார் எனவும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்;ப் இதனை கட்டு;க்கதை என வர்ணித்துள்ளார் குடியரசுகட்சியினர் இராணுவதளபதியை நீக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்
எனினும் அவர் மீது தனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவி;த்துள்ளார்.