தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பீதியில் பிரித்தானிய மக்கள்
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 89 ஆயிரத்து 176 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 277 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரையில் 1 கோடியே 63 இலட்சத்து 33 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 55 ஆயிரத்து 317 பேர் மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 30 இலட்சத்து 68 ஆயிரத்து 969 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றால் 549 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 47 ஆயிரத்து 849 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 31 இலட்சத்து 9 ஆயிரத்து 694 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.