உக்ரைன் விவகாரம்; ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த கனடா
உக்ரைன் மீதானா ரஷ்யாவின் நடவடிக்கைகள் ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ என கனடா பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), குறிப்பிட்டார்.
உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் இன்னும் அதிகரித்ததுடன் இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.
உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான பொருளாதார தடைகளை விதித்தார்,
ஜனாதிபதி விளாடிமிர் புதின் உக்ரைனின் பிரிவினைவாத பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றிற்கு 'சுதந்திரத்தை' அங்கீகரிப்பதாக அறிவித்ததை அடுத்து, ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்.
Russia’s illegal actions in Ukraine are an attack on democracy – and a threat to peace around the world. Make no mistake: This is a further invasion of a sovereign state. In coordination with allies and partners, Canada is responding with a first round of economic sanctions.
— Justin Trudeau (@JustinTrudeau) February 23, 2022
இதுகுறித்து ட்ரூடோ (Justin Trudeau) தனது டுவிட்டர் பக்கத்தில் ,
“உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மற்றும் உலகம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாகும்.மேலும் இது ஒரு இறையாண்மை அரசின் மீதான படையெடுப்பு ஆகும். இதனால் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து, கனடா முதல் சுற்று பொருளாதார தடை விதித்துள்ளது” என (Justin Trudeau)பதிவிட்டுள்ளார்.