உக்ரைன் மதுபான ஆலையில் வெடி குண்டுகள் தயாரிக்கும் பணி மும்முரம்!
உக்ரைனில் உள்ள மதுபான ஆலையில் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுக்க பெட்ரோல் வெடி குண்டுகளை தயாரிக்கும் பணி மும்மரமாக இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐந்தாவது நாளாக இன்றும் உகரைன் மீது தொடர்ந்து ரஷ்ய படைகள் போர் தொடுத்துள்ளதால் அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துமாறு பொது மக்களுக்கு உக்ரைன் அரசாங்கம் அறிவுறுத்தியது.
மேலும் பொது மக்களின் தற்காப்புக்கு ஆயுதங்களை அரசே வழங்கி வருகிறது.
இந்நிலையில் லிவிவ் நகரில் உள்ள பியர் தயாரிப்பு ஆலையில் ரஷ்ய படைகளை தாக்க விசேஷ பெட்ரோல் வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் பொது மக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.