உக்ரைனுக்கு 750 பில்லியன் டொலர்கள் தேவை: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படை
போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் மீட்பு மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற ஜெலென்ஸ்கி, (Volodymyr Zelensky) ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட முழு சேத விவரங்களையும், நாட்டின் தேவைகளையும் விவரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவது ஒரு நாட்டுடைய பணி அல்ல, உலக நாடுகளின் பொதுவான பணியாகும் என்று குறிப்பிட்டார்.
மட்டுமின்றி, உக்ரைனை மறுசீரமைப்பது உலகளாவிய அமைதிக்கான ஆதரவிற்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்றும் அவர் (Volodymyr Zelensky) தெரிவித்தார்.
இதனிடையே, போர் தொடர்பான செலவீனங்களில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் ரஷ்யா, நாட்டின் செலவுகளை 24 பில்லியன் பவுண்டுகளுக்குள் குறைத்துக்கொள்ள திட்டம் வகுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.