ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டோம்! உக்ரைன்
உக்ரைன் மீது ரஷ்யா இரண்டாவது நாளாக தாக்குதல் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசாங்கமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் சார்பில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக துணை மந்திரி ஹன்னா மால்யார் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், உக்ரைன் மோதலில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.