5-வது மாதமாக தொடர்ந்து இடம்பெறும் உக்ரைன் - ரஷ்யா போர்!
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த பெப்ரவரி மாதம் 24-ம் திகதி தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போர் 5-வது மாதமாக தொடர் இடம்பெற்று வருகின்றது.
இந்தப்போரில் துறைமுக நகரமான மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவிட்டாலும், தலைநகரை கைப்பற்ற இயலாமல் போய்விட்டது.
இப்போது ரஷ்யாவின் கவனம், கிழக்கு உக்ரைன் மீது படிந்துள்ளது. தற்போது அங்குதான் சண்டை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு ரஷ்யா கடந்த மார்ச் மாதம் 2-ம் திகதி முதல் இதுவரையில் 31 ஆயிரத்து 241 டன் மருந்துகள், உணவு பொருட்கள், மருத்துவ கருவிகள், சாதனங்களை வழங்கி உள்ளது.
இந்த தகவலை ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிக்கைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.