உக்ரைன் ரஷ்யா போர்; போப் ஆண்டவர் சிறப்பு பிரார்த்தனை
ரஷியா- உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வந்து சமாதானம் நிலவுவதற்காக போப் ஆண்டவர் (Pope Francis) சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளார்.
வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் இந்த சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பிஷப்கள், பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் என 3,500 பேர் கலந்து கொண்டனர்.
பிரார்த்தனையின் போது பேசிய போப் பிரான்சிஸ் (Pope Francis), கடந்த நூற்றாண்டில் நடந்த 2 உலகப் போர்கள் தந்த கசப்பான அனுபவங்களை மனித குலம் மறந்துவிட்டதாக கூறினார்.
இந்த சிறப்பு பிரார்த்தனை 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. அதேபோல் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் உள்ளூர் மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மேலும் வாடிகனில் நடந்த பிரார்த்தனையில் ரஷியா மற்றும் உக்ரைன் தூதர்கள் பங்கேற்ற போதும், அவர்கள் அரங்கத்தில் எதிரெதிரே அமர்ந்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் (Pope Francis) தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.