போப் பிரான்சிஸை இரகசியமாக சந்திக்கவுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
ரஷ்யா - உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு ஆண்டுகளை கடந்த நிலையிலும் இரு நாட்டுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மேலும், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு உலக நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் முயற்சி செய்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர சமாதான முயற்சி மேற்கொள்ள ஆரம்பத்தில் இருந்து போப் பிரான்சிஸ் (Pope Francis) விருப்பம் தெரிவித்து வந்தார்.
போர் தொடர்பாக இரண்டு நாட்டு தலைவர்களை சந்தித்தும் பேச போப் விருப்பம் தெரிவித்திருந்தார், இருந்தும் இந்த சந்திப்பு நடக்காமல் இருந்தது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) சந்திப்பு நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்கு உக்ரைன் ஜனாதிபதி அனுமதி வழங்கியதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் போப்பிற்கு தெரிவித்ததாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை, உக்ரைன் ஜனாதிபதியின் சந்திப்பு விவரங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்பட்டது இல்லை. அதுபோலவே இந்த சந்திப்பும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போப் பிரான்சிஸை எதிர்வரும் சனிக்கிழமை ஐரோப்பிய நாடான வத்திக்கானில் உக்ரைன் அதிபர் சந்திப்பார் என்று உள்துறை வட்டார செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.