ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய உக்ரைன் படைகள்! நள்ளிரவில் தப்பியோடிய புடின் படைகள்
உக்ரைன் படைகள் கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பாம்பு தீவை ( Zmiinyi island ) கைப்பற்றியுள்ள நிலையில் இது ரஷ்ய ராணுவத்திற்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதனால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
ரஷ்ய ராணுவம் போரில் தொடர்ந்து முன்னோக்கியே சென்றுகொண்ருந்தது. இந்நிலையில் கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள ஸ்நேக் தீவை ( Zmiinyi island ) உக்ரைன் ராணுவம் அதன் கட்டுபாட்டுக்கு கொண்டு வந்துள்ள நிலையில் அங்கிருந்த ரஷ்ய துருப்புக்கள் நாள்ளிரவில் தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது.
இது ரஷ்யாவிற்கு ஒரு பெரும் பின்னடைவு என்று கூறப்படுகிறது. உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதலால் இந்தத் தீவில் ரஷ்ய படை பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
நடு இரவில் ரஷ்ய படைகள், அதிவேக படகுகளில் இத்தீவிலிருந்து சென்றுவிட்டதாக உக்ரை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் கருங்கடலில் உள்ள ரஷ்ய போர் கப்பல்கள், உக்ரை நாட்டின் தானிய ஏற்றுமதியை போர் நடப்பதற்கு முன்பிருந்து தடுத்து நிறுத்தியது. கருங்கடலிள் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஓடெசா துறைமுகம் உக்ரை கட்டுபாட்டில் இருக்கிறது.
உக்ரை படைகள் ஸ்நேக் தீவை கட்டுப்பாடுக்கு கொண்டுவந்தாலும், சரக்கு போக்குவரத்து ரஷ்ய படைகளிடமிருந்து தாக்குதலை சந்திக்காமல் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் கூறப்படுக்கிறது.
பாம்பு தீவின் முக்கியத்துவம்
இந்தத் தீவு சிம்மின்ஹி ( Zmiinyi island ) என்று உக்ரைன் மொழில் அழைக்கப்படுகிறது. பாறைகளால் ஆன 700 மீட்டர் நீளமே கொண்ட நிலபரப்பு. இது கடலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும், ஒடெசாவிலிருந்து தென் மேற்கில் உள்ளது.
ருமேனியாவிற்கு அருகில் இத்தீவு ( Zmiinyi island ) இருக்கிறது. ருமேனியாவிடம் உக்ரைக்கும் இருந்த பிரச்சனையை 2009 ஆண்டில் சர்வதேச நீதிமன்றம் முடித்துவைத்தது.
இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே எல்லை கோடு ஏற்பட்டது. அதேவேளை கருங்கடலில் சில பகுதிகள் மற்றும் ஸ்நேக் தீவிகளில் ( Zmiinyi island ) எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் நிறைந்து காணப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.